இஸ்லாம் ஓர் அழகிய சுவனப்பாதை!பல்வேறு அறிஞர்களின் இஸ்லாம் குறித்த கருத்து



இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் ‎இஸ்லாம் தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.‎
  • காந்தியடிகள் கருத்து 
  • ஜவஹர்லால் நேரு
  •  Dr. அம்பேத்கார்
  •  Dr. ராதா கிருஷ்ணன்
  •  அறிஞர் அண்ணா
  •  பெரியார்

காந்தியடிகள்

இஸ்லாம் அதன் மகத்துவமிக்க நாட்களில் சகிப்புத்தன்மை அற்றதாக ‎இருக்கவில்லை. உலக நிர்வாகத்தையே அது பொறுப்பேற்றிருந்தது. ‎மேற்கு இருளில் மூழ்கியிருந்தபோது ஒரு பிரகாசமான தாரகை ‎கிழக்கில் தோன்றி துயரில் ஆழ்ந்திருந்த உலகுக்கு ஒளியையும் ‎செழிப்பையும் வழங்கியிருந்தது. இஸ்லாம் ஒரு பொய்யான ‎மார்க்கமல்ல. இந்துக்கள் அதனை கண்ணியத்துடன் அணுகட்டும். ‎அப்போது நான் அதனை நேசிப்பது போல் அவர்களும் நேசிப்பார்கள்.‎ ஆண்டவன் ஒருவனே கடவுள் ஒன்றுதான் என்பதை எள்ளளவும் ‎குழப்பமின்றி உறுதிப்படுத்தியது இஸ்லாம்தான். குர்ஆனைப் பக்திப் ‎பரவசத்துடன் படிக்கும் போது எனக்கு ஒரு வித காந்த சக்தி ‎ஏற்படுகின்றது. என் இந்து சகோதரர்கள் இதைப் பரிசுத்த உள்ளத்துடன் ‎படித்தால் உண்மை உபதேசம் வெளியாவதை உணர்வார்கள்.‎

நபிகள் நாயகம் (ஸல்) பற்றி காந்தியடிகள், அம்மஹானின் சிறிதும் பிசகாத ஆடம்பரமற்ற வாழ்க்கையும் தான் ‎என்ற அகம்பாவத்தை அறவே நீக்கிய தன்மையும் கொடுத்த ‎வாக்குறுதியை தவறாது கண்ணியப்படுத்துதலும் நண்பர்களிடத்தும் ‎தம்மைப் பின்பற்றியவர்களிடத்தும் கொண்டிருந்த ஆழ்ந்த அன்பும் ‎அவருடைய ஆண்மையும் அசாமையும் கடவுளினிடத்திலும் தாம் ‎கொண்ட வேலையிடத்தும் தளராத நம்பிக்கையும் ஆகிய இவைகளே ‎அவருடைய வெற்றிக்குக் காரணமாயிருந்து எதிர்த்துவந்த பல ‎இடையூறுகளையும் வென்றன. (யங் இந்தியா 21. 03. 1929)‎. அத்தகைய மகானை உண்மையை நாடும் என்னைப் போன்ற ஒருவன் ‎எவ்வாறு கண்ணியப்படுத்தாதிருக்க முடியும்?‎

ஜவஹர்லால் நேரு

அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் நுழைவதற்கு சில ஆண்டுகளுக்கு ‎முன்பே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற நிலையில் இந்திய நாட்டின் ‎தென்பகுதியை அடைந்துவிட்டது.‎ முஹம்மது நபி (ஸல்) அவர்களின் இஸ்லாத்தைப் பரப்பபும் ‎துணிவால் அவர் தம்மீதும் தமது கொள்கைமீதும் எத்துணை உறுதி ‎பூண்டிருந்தார் என்பது தெளிவு.‎ இத்தகைய உறுதியான மனோபாவத்தை அன்றைய சூழ்நிலையில் ‎அவர் உண்டாக்கிக்கொண்டது ஆச்சிரியப்படத் தக்கதே! இத்தகைய ஒரு ‎உறுதியால்தான் மனித வாழ்க்கைக்கு புறம்பான நிலையிலிருந்த ‎காட்டரபிகளைக் கொண்டு உலகில் சரிபாதி பகுதியிலே வெற்றிக்கொடி ‎நாட்டினார்.‎ இத்தகைய வெற்றிக்குக் காரணம் முதலாவதாக முஹம்மத் நபி (ஸல்) ‎கொண்டிருந்த உறுதிஊக்கம். இரண்டாவதாக இஸ்லாம் போதிக்கும் ‎சமத்துவம் சகோதரத்துவம். (டிஸ்கவரி ஆப் இந்தியா)‎

ரபீந்திரநாத் தாகூர்

முசல்மான்களை ஒன்றாக இணைப்பது அவர்களுக்குத் தர்மத்திலுள்ள ‎பற்றே. சடங்குகளிலுள்ள பிடிப்பபு அல்ல. அனாவசியமான ‎கட்டுப்பாடுகள் அவர்கள் செய்யும் வேலைகளை அடக்கவில்லை. ‎இஸ்லாமிய தர்மம் அவர்களை மிகவும் நெருக்கமாக ‎ஒன்றுபடுத்தியிருக்கிறது. ஒரு கொள்கையைப் பல ‎அர்த்தங்களைக்கொண்டு பார்க்காமல் ஒரே கருத்துடன் ‎வழிபடுகின்றனர். அழைத்த மாத்திரம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ‎விருப்பத்துடன் உயிரைத் தரக்கூடிய தன்மை வாய்ந்தது இவர்களின் ‎தர்ம உணர்வு. (புத்தகம்-கோரா நாவல்)‎

Dr. அம்பேத்கார்

பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி ‎செய்த முஹம்மதைப்(ஸல்) புகழ என்னிடம் வார்த்தை கிடையாது.‎

பெரியார்

இன இழிவுகளை நீக்கி சிக்கலைத் தீர்க்கக் கூடிய மார்க்கம் ‎இஸ்லாம் தான். இன இழிவுகள் நீங்க அதுவே நன்மருந்து.‎

Dr. ராதா கிருஷ்ணன்

பகுத்தறிவுக்குப் புரியாத விடயங்கள் எதுவும் இஸ்லாத்தில் கிடையாது. ‎இஸ்லாத்தின் பலமும் அழகும் அதன் எளிய தன்மையிலேயே ‎இருக்கின்றன. அது ஓர் இயற்கை மதம். (மார்க்கம்)‎

அறிஞர் அண்ணா

முஹம்மது(ஸல்) போதித்த மார்க்கம் இஸ்லாம் வைரம் போன்றது.ஒரே ‎இனம் ஒரே குலம் ஒரே மறை ஒரே வணக்கம் இவைகளைச் சிந்திக்கத் ‎தலைப்பட்டேன். இஸ்லாம் ஒன்றைத் தவிர வேறு எதுவும் எனக்கு ‎விடை தரவில்லை.

சரோஜினி நாயுடு

சகோதரத்துவப் பாடத்தை சுதந்திர உணர்வை சமத்துவப் பண்பாட்டைப் ‎போதித்து இவ்வவுலகைப் பொலிவுறச் செய்த பெருமைக்குரிய ‎அண்ணல் நபியின் திருப்பெயர் உலகம் உள்ளளவும் ‎ஒலித்துக்கொண்டே இருக்கும்.‎ நவீன உலகத்தில் உண்மை ஜனநாயக அரசியலை இஸ்லாம் நிலை ‎நாட்டிற்று என்னும் ஒரே அம்சத்தில்தான் இம்மதம் ஏனைய ‎மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனக் கூறுகிறேன்.‎ உலகம் இன்று எதை வேண்டி நிற்கிறது? உலக மக்களின் தற்போதைய ‎வேண்டுதல் ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய ஒரு ‎சமூக அமைப்பைப் படைக்க வேண்டும் என்பதுதான்.‎ இந்த உயர்நிலை இலட்சியத்தை தேவையைப் பாலைவனத்தின் ‎தீர்க்கதரிசி அண்ணல் நபி(ஸல்) பதிமூன்று ‎நூற்றாண்டுகளுக்கு முன்னரே உபதேசித்து அருளினார்.‎ source
Previous
Next Post »