அனைத்து உயிரினத்திலும் ஜோடி!

மேலும்அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்துஅதில்
 உறுதியான மலைகளையும்ஆறுகளையும் உண்டாக்கினான்இன்னும் அதில்ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளைஉண்டாக்கினான்அவனே இரவைப் பகலால் மூடுகிறான்
 - நிச்சயமாக இவற்றில்சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 13:3)









“(அவனேஉங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்இன்னும் அதில்உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்மேலும் வானத்திலிருந்து நீரையும்இறக்கினான்இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களைஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்” (என்று இறைவன் கூறுகிறான்). (அல்குர்ஆன் 20:53)
பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்எல்லாவற்றையும், (மனிதர்களாகிய)இவர்களையும்இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானேஅவன் மிகவும் தூய்மையானவன்(அல்குர்ஆன் 36:36)
நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடிஜோடியாக நாம் படைத்தோம்(அல்குர்ஆன் 51:49)


திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளைஅமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.தாவரங்களிலும் ஆண்பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன்கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.


மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல்இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கிறான்.


 மின்சாரத்தில் பாஸிட்டிவ்நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன.அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான்,எலக்ட்ரான் என்றுஜோடிகள் இருக்கின்றனஇப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும்ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மதுநபியின் சொந்த சொல் இல்லைஇறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்
                                              -source
Previous
Next Post »