அசிங்கத்தின் மொத்த உருவம்! மத்ஹப்!!=பாகம்-02


 7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்
 8. கற்பனைக் கதைகள்
 9. ஆபாசக் களஞ்சியம் 
10. கோமாளிக் கூத்து
11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்
12.மூத்திர வைத்தியம்


7. விற்கக் கூடாதவைகளை பிறர் மூலம் விற்கலாம்

ஒரு முஸ்லி ம் சாராயத்தை வாங்குமாறு அல்லது விற்குமாறு கிறித்தவருக்குக் கட்டளையிடுகிறார். அந்தக் கிறித்தவரும் அதைச் செய்கிறார். இது அபூஹனீபா அவர்களின் கருத்துப்படி ஆகுமானதாகும்.
(ஹிதாயா பாகம் 2, பக்கம் 41)


8. கற்பனைக் கதைகள்

அபூஹனீபா இஷாவுக்கு செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுதார். இவ்வாறு நாற்பது வருடங்கள் லி (அதாவது 15 ஆயிரம் நாட்கள்) லி தொழுதிருக்கின்றார். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்.
துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 38

அபூஹனீபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து லி இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது கா ன் மீது வைத்துக் கொண்டு, வலது கா ல் நின்றார். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார். பின்னர் ருகூவு செய்து ஸஜ்தா செய்தார். பின்னர் வலது காலை இடது கா ன் மீது வைத்துக் கொண்டு இடது கா ல் நின்றார். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்.
என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளான். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீபா கூறினார்.
உடனே கஅபாவின் மூலையி ருந்து, ”அபூஹனீபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும் கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்” என்று ஓர் அசரீரி கேட்டது.
துர்ருல் முக்தார், பாகம் 1, பக்கம் 39


9. ஆபாசக் களஞ்சியம்

மிருகத்துடன் அல்லது செத்த பிணத்துடன் உடலுறவு கொண்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1 பக்கம் 23

ஒருவன் தனது ஆணுறுப்பை தனது பின் துவாரத்தில் நுழைத்தால், விந்து வெளிப்படாவிட்டால் குளிப்பு கடமையில்லை. லி துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 150


10. கோமாளிக் கூத்து


ஒருவர் உளூச் செய்யும்போது ஏதோ ஓர் உறுப்பைக் கழுவவில்லை. எந்த உறுப்பு என்று தெரியவில்லை. அப்படியானால் (இடது காலாகத் தான் அது இதுக்க வேண்டும். எனவே) இடது காலைக் கழுவ வேண்டும். ஏனெனில் அதுதான் கடைசிச் செயல்.
(துர்ருல் முக்தார் பாகம் 1, பக்கம் 51)


11. செத்த பிணத்தில் சூப் போட்டு குடிக்கலாமாம்

தாமாகச் செத்தவை ஹராம் என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது. அவை முழுமையாக ஹராம் என்பதில் சந்தேகமில்லை. தோலை மாத்திரம் பாடம் செய்து பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளனர். ஆனால் மத்ஹபு என்ன கூறுகின்றது?

செத்த பிராணிகளின் முடியும் அதன் எலும்பும் தூய்மையானவை.
ஹனபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹிதாயா பாகம் 1, பக்கம் 41

செத்த ஆட்டின் எலும்பை சூப் போட்டு குடிக்கச் சொல்கிறார்களா? இந்தச் சட்டத்தை எங்கிருந்து எடுத்தார்கள்? ஷரீஅத் பேரவை விளக்கட்டும்.



12.மூத்திர வைத்தியம்

ஒருவருக்கு மூக்கில் இரத்தம் வடிந்தால் அல்ஹம்து அத்தியாயத்தை மூத்திரத்தினாலும் இரத்தத்தினாலும் நிவாரணம் நாடி நெற்றியிலும் மூக்கிலும் எழுதலாம். அதில் நிவாரணம் இருப்பதாக அறியப்பட்டால் இவ்வாறு செய்யலாம். ஆயினும் அவ்வாறு நிவாரணம் கிடைக்கும் என்று தகவல் இல்லை. (துர்ருல் முக்தார் லி பாகம் 1, பக்கம் 154)

தாகமாக இருப்பவர் மதுபானம் அருந்த அனுமதிக்கப் படுவது போல் வறுமை நேரத்தில் செத்த பிணத்தைச் சாப்பிட அனுமதிக்கப் படுவது போல்இதற்கும் அனுமதியளிக்கப் படும். இதுதான் பத்வா! (அதே நூல், அதே பக்கம்)
Previous
Next Post »